புதன், 14 செப்டம்பர், 2011

திரு ராஜமூர்த்தி 14.09.2011

திரு. ராஜமூர்த்தி
ஏற்றுமதி/ இறக்குமதி ஆலோசகர்
இயக்குனர், Global institute of foreign trade , மதுரை
படிப்பு: MTech MBA
தகப்பனார்: பேராசிரியர்
சிறப்பு : இந்நிகழ்ச்சியின் சிறப்பு எவரையும் ஏற்றுமதி/ இறக்குமதியில் ஈடுபட தூண்டுவதும் நம்மாலும் முடியும் என நினைக்க தூண்டுவதும்.

Export promotion council ஆற்றும் சேவைகள்:
மாங்காயில் இருந்து பல்ப் எடுத்து அதை ஏற்றுமதி செய்ததன் மூலம் தருமபுரியில் பல தொழில் நிறுவனங்கள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.. இதில் export promotion council கள் இந்த மாதிரியான தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றன. market development , technical development இம்மாதிரி ஆன உதவிகளை நாம் இவர்களிடம் பெறலாம்.

QUOTA
WTO வந்ததுக்கு அப்புறம் quota eliminate பண்ணிட்டாங்க. உலகம் என்பது ஒரே சந்தை. எது தான் ஸ்லோகன். தரமான பொருட்களை வைத்திருப்போர்
இந்தியாவில் இணைக்கும் சில பொருட்களுக்கு உதாரணத்துக்கு காட்டன் கு demand high இருந்துச்சு அதனால வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி ஆச்சு உள்நாட்டுல விலை ஜாஸ்தி ஆச்சு. அதனால உள்நாடுல இருக்குற textile உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி எ தடை செய்ய கோரினார்கள். அப்ப அரசாங்கம் restricted கோட்டா based அதாவது குறிப்பிட்ட quantity தான் அனுப்ப முடியும் னு கொண்டு வந்தாங்க. உள்நாட்ல விலை ஏற்றத்த கட்டுபடுத்த இந்த கோட்டா சிஸ்டம் உதவுச்சு. அத்யாவசிய பொருட்களுக்கு இது நடைமுறைக்கு வந்தது.
வேளாண் துறையில்... value addition:
நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் வேளாண் துறையில் வருமானம் மிக குறைவு. இத்துறையில் வருமானத்தை அதிகரிக்கும் வைப்புகாலை ஏற்படுத்தி தறிவது நம் கடமை. உலக அளவில் நம் வேளாண் பொருட்களுக்கு தேவை உள்ளது.
உதாரணமாக, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்த மஞ்சள் ஒரு வர்ண பொருள், கிருமி நாசினி, அழகு பொருள் சாதனங்கள், உணவு பொருள் தயாரிப்பு ஆகியவற்றிற்கு அத்தியாவசியமானது.
இந்த பயன்களை முழுமையாக பெற்றிட மஞ்சள்ளுக்கு value addition என்று ஒன்று தேவை படுகிறது. அதாவது மஞ்சளை பவுடர் ஆகவோ திரவமாகவோ செய்து, சில பொருட்களில் ஆயில் extract செய்யலாம் இது போன்ற value addition செய்தால் அதன் பலன்கள் பல. நம் விவசாயிகளுக்கு நாம் இதை உணரச்செய்தால் அவர்கள் பலன் அடைவார்கள் நம் வேளாண் பொருட்களும் உலகச் சந்தையை சென்றடையும் அவற்றின் மதிப்பும் கூடும் நம்மவர்களின் வருமானமும் கூடும்.

தக்காளியை எடுத்துக்கொண்டால் அதற்கும் சர்வதேஸ் சந்தையில் தேவை அதிகம். அனால் நாம் இங்கு விளைவிக்கும் தக்காளிகளை அப்படியே ஏற்றுமதி செய்ய முடியாது அவற்றிற்கு value addition செய்து அதை ஒரு paste ஆக்கி ஏற்றுமதி செய்ய முடியும். உலகின் எந்த மூளையையும் சென்றடையும். இவ்வாரக நம் வேலன் போருட்கல்லின் மதிப்பை கூடி வருமானத்தையும் ஈட்டலாம்.
பழங்களை எடுத்துக்கொண்டமனால் உலக அளவில் அதிகம் தேவைப்படும் பழம் வாழைப்பழம். அதன் உற்பத்தியுளும் இந்தியாவே முதளிடத்துள் உள்ளது. அனால் ஏற்றுமதி என்று வரும் பொது நாம் பின்னுக்கு தள்ளபடுகிறோம். இது சீக்ரம் கெட்டுப்போகும் தன்மை உடையதனதால் நம் பழங்கள் சந்தையை சென்றடைய முடியவில்லை.
இதேபோல் நம் மாம்பழங்களுக்கும் வெளி நாடுகளில் நல்ல demand உண்டு.
இந்த நிலையின் மறுபக்கம், நம் விளைச்சலுக்கு சந்தை தேடுவது போக, சந்தைக்கு ஏற்ப நாம் விளைச்சல் செய்வது.
உதாரணதிற்கு ஐரோப்பிய நாடுகளில் காலை உணவுடன் வெள்ளரிக்கையில் ஆனா ஒரு ஊறுகாயை உண்பது வழக்கமாக உள்ளது. நம் கிராமங்களில் இந்த வெள்ளரிக்காய் மிக எளிமையாக கெடைக்க கூடிய பொருள். மகாராஷ்டிரத்தில் சில கம்பனிகள் இந்த வைப்பை பயன்படுத்தி அந்த வெள்ளரி pickle ஐ இங்கேயே தயார் செய்து ஏற்றுமதி செய்கின்றன.
அதே போல் நாம் சீண்டாத வேப்ப எண்ணெய் க்கு வெளி நாடுகளில் அதிக demand இருக்கு. இதை நாம் பயன் படுத்திக்கொள்ளலாம். இது போல் அயல் சந்தையில் உள்ள தேவைக்கு ஏற்ப நம் பரம்பரய் பொருட்களின் விளைச்சலை அதிகம் செயதொமனாலே நாம் அதிகம் ஈட்டலாம்.
Quality controls பற்றி...
WTO ஐ பொறுத்த வரை தர கட்டுபாடுகளுக்கு உலக அளவில் ஒருமித்த கருத்து எட்டபடாததால் உலக அளவில் ஒரே தர நெறி முறை என்பது இல்லை. உலக வர்த்தகத்தை பொறுத்த வரை பல் வேறு விஷயங்களுக்கும் ஒரு சரியான நெறி முறைகள வகுக்கப்பட்டு விட்டாலும் , இன்னும் தர கட்டுபாடுகள் ஒரு எட்டாத இலக்காகவே உள்ளன. ஒவ்வொரு நட்டில்லும் வேறு தர நெறிமுறைகளே இதற்க்கு காரணம்.
இதனால் தான் இண்டைவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருள் முதலில் இந்திய அரசாங்கத்தின் quality inspection க்கும் பின்பு இறக்குமதி செய்யும் நாட்டின் தர கட்டுபடுகளுக்கும் உள்ளாக வேண்டும் என்ற நிலை உள்ளது.
குறிப்பாக உணவு பொருட்கள், ரசாயன பொருட்கள், கடல் உணவு பொருட்கள், குறிப்பாக எறால் முதலியவை இதற்க்கு அதிகமாகவே உட்படுத்த படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் இங்கிருந்து ஏற்றுமதி ஆகும் எறால் பொருட்களுக்கு catchment certificate என்ற ஒன்று அவசியம் என்றொரு புதிய கட்டுபாட்டை கொண்டு வந்தனர். அதாவது மீன்கள் இந்த கடல் பகுதியில் பிடிக்கப்பட்டன என்றொரு சான்றிதழை கேட்டனர்.
இந்த சான்றிதழை பெறுவதற்காக ஏற்படும் கால தாமதம் நம் கடல் பிடியின் durability ஐ பாதித்தன. சந்தையிலும் நம் பொருட்களுக்கான demand உம குறைந்துபோனது. இதற்காக இந்திய அரசு தலையிட்டு ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

நோய்கள் சார்ந்த கட்டுபாடுகள்..
bird flu வாத காலத்தில் நம் முட்டை ஏற்றுமதி, மற்றும் இறைச்சி ஏற்றுமதி பெரிதும் அடிபட்டு போனது. உதாரணமாக மேற்கு ஆசியா வில் நம் முட்டைகளுக்கு அன்று விதித்த தடை இன்றும் கூட விளக்கப்படவில்லை.

மாம்பழம் பொறுத்த வரையில் கூட நாம் உபயோகப்படுத்தும் ரசாயன பொருட்கள் வளர்ப்பு முறைகள் ஆகியவற்றிர்க் அமெரிக்க முதலிய நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. நம் மாம்பழங்களில் கொட்டை பகுதியில் வண்டு இருபது இயல்பானது அனால் இது அவர்களது தர கட்டுபாட்டில் ஏற்கமுடியாதது. இது போன்ற எதிர்ப்புகளால் நம் மாம்பழங்கள் இப்போது ஒரு விதமான screening கு உட்படுதப்டுகின்றன. இது நம் ஏற்றுமதியை பெரிதும் பாதித்தது.

நம் மாம்பழங்களுக்கு demand இருந்தும் கூட இந்த testing போன்றவற்றால் ஏற்படும் காலதாமதத்தால் நம் பொருட்கள் தரம் எழந்து போகும் நிலை உண்டாகிறது. இது போன்ற, சுழலில் நம் வளர்ப்பு முறைகளை நாம் சர்வதேச தேவைகளுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற கட்டுபாடுகள் நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. ஆசிய பகுதி நாடுகளில் ஏறத்தாழ ஒரே மாதிரியான தர கட்டுபாடுகளும், ஐரோப்பிய , மற்று வாடா அமெரிக்க நாடுகளின் தரம் மிக உயர்ந்ததாகவும், ஆப்ரிக்க நாடுகளில் குறைந்ததாக உள்ளது. ஒரே மாதிரியான தர கொள்கையை நோக்கி செல்வதற்கு WTO முயன்று வருகிறது.

ஏற்றுமதி செய்ய என்ன தகுதிகள்...
அடிப்படை தகுதி கல்வி ரீதியாக வோ பொருளாதார ரீதியாகவோ ஏதும் இல்லை. ஒருவரின் தன்னம்பிக்கையும் உலக பார்வையும் தான் தேவை படிகிறது. புதிய முயற்சிகள், ஆர்வம், இவை தான் தேவை. ஒரு தனி நபர் வீட்டில் இருந்த படி சில ஆயிரம் ரூபாய் முதலீடிலேயே ஏற்றுமதி செய்யலாம்.
எ கா வாக ஹாங்காங் இல் சின்ன நாட்டில் முப்பது லட்ச ஏற்றுமதிஆளர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலோனோர் merchandise அல்லது ஒரு agency என்ற அளவிலேயே செயல் படுகின்றன. இவர்கள் supply உள்ள இடத்தில் இருண்டு வாங்கி demand உள்ள எடத்துக்கு ஏற்று மதி செய்கின்றனர் அவ்வளவே. இதன் மூலமே அவர்கள் உலக உளவில் ஒரு சிறந்த நிலையை எட்டி உள்ளனர்.

நம் நாட்டில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்ற தவறான எண்ணம் பரவியுள்ளது. இதை உடைத்தெறிய வேண்டும்.
உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்களால் பயிற்ருவிக்கபட்ட ஒருவர், மீனவர்களை சேர்ந்தவர், அயல் நாடுகளுக்கு சங்கு முதலிய sea shells கரையில் கிடைக்கும் கிழிஞ்சல் பொருட்களை , நாம் குப்பைகளாக நினைக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து வெற்றி கண்டுள்ளார். நம் பொருளாதார வசதிக்கேற்ப நாம் ஏற்றுமதியில் திட்டமிட்டு ஈடுபடலாம்.
யார் வேண்டுமானாலும் ஏற்றுமதியாளர் ஆகா முடியும் என்பதே உண்மை.
merchandise exports பற்றி..
ஏற்றுமதியில் இரு வகை, ஒன்று manufacturing exports மற்றொன்று merchandise exports . முதல் வகையில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் தம் உற்பதயை ஏற்றுமதி செய்கின்றன. இரண்டாம் வகையில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். இதில் உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருளை வாங்கி தேவை உள்ள நாடுகளுக்க் நாம் ஏற்றுமதி செய்கிறோம். ஹாங்காங் போன்ற குட்டி நாடுகள் உற்பத்தி திறன் அதிகம் இல்லாததால் re -export என்று சொல்லப்படும் ஒரு நாட்டம் இருந்து இறக்குமதி செய்து இநோன்ருக்கு ஏற்றுமதி செய்வதிலேயே ஈடுபடுகின்றன.
நாம் re export செய்ய வேண்டிய தேவை இல்லை. இந்தியாவில் பல இடங்களில் பரவி உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அவற்றை ஏற்றுமதி செய்யலாம். இது தான் merchandise exports
இதில் நாம பெரிய முதலீடு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது demand உள்ள பொருள்ளை தேர்வு செய்து அதை ஏற்றுமதி செய்தாலே போதும்.

ஏற்றுமதி ஆளராக வழி முறைகள் :
முதலில் ஏற்றுமதி இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் அங்கீகாரம் பெறவேண்டும். இதை IEC என்பர் அதாவது IMPORT EXPORT CODE என்பர். இதை பெற நீங்கள் முதலில் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் இது ஒரு proprietership ஆகவோ partnership ஆகவோ இருக்கலாம். பின் DGFT என்று சொல்லபடுகிற directorate general of foreign trade அலுவலக்தில் இவை மண்டல அளவில் உள்ளன , தமிழ் நாட்டில் சென்னை மதுரை கோவையில் உள்ளன. இங்கு ஏற்றுமதி இறக்குமதிக்கான license ஐ பெற்றுக்கொள்ளலாம். இரண்டுக்கும் சேர்த்து ஒரே license தான். அதுமட்டும் இல்லாமல் எந்த பொருள் ஏற்றுமதி செய்யவும் ஒரே license தான். எந்த பொருள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு தான் license கு apply செய்ய வேண்டும் என்பது இல்லை. ஏற்றுமதி செய்யும் எண்ணம் இருந்தாலே போதும்.
இந்த license வைத்து அரசு அங்கீகரித்துள்ள எந்த போருல்லையும் ஏற்றுமதி/ இறக்குமதி செய்யலாம். கூடுதலாக exports promotion council இல் member ஆக வேண்டி இருக்கலாம். இது சில நேரங்களில் கட்டாயமாக இருக்கும் சில நேரனக்ளில் optionalaaga இருக்கும் அது நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை பொருத்தது. அவ்வளவே.
அதற்கு பின் நடை முறை விஷயங்களில் நாம் நம்மை தேர்ச்சி செய்து கொள்ள வேண்டும் இது பிறர் அனுபவம் மற்றும் முறையான பயிற்சியின் முலம் பெற்றுக்கொள்ளலாம்.குறிப்பாக customs clearance , RBI இன் அந்நிய செலவாணி guidelines முதலிய நடைமுறை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

பணத்துக்கு பாதுகாப்பு
தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக தற்போது பண பரிவர்த்தனைகள் மிகும் பதுகாபநவைஆக உள்ளன. உதாரணமாக LC என சொல்லபடுகிற Letter of Credit துணை வருகிறது. இதில் இறக்குமதியாலரின் சார்பில் அவரது வங்கி நமக்கு சேர வேண்டியா பணத்துக்கு உத்தரவாதம் கொடுக்கிறது.

இது போன்ற முறைகளால் பண பரிவர்த்தனைகள் இன்று ரொம்பவே பாதுகாப்பானவையாக உள்ளன.

இறக்குமதி பற்றி
நாம் petroleum பொருட்களை அதிகம் இறக்குமதி செய்கிறோம் அது மட்டும் இன்றி பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம். உதாரணமாக சமையல் எண்ணேய் thevaiyil நாம் இன்று 50 % மேல் இறக்குமதியே செய்கிறோம். இது நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். பருப்பு முதலிய பொருட்களிலும் இந்த நிலா ஏற்பட வைப்பு உள்ளது. நம் அடிப்படை தேவைகளுக்கு நாம் இறக்குமதி செய்யும் நிலை நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

உலக சந்தையில் சீனா
WTO வெளியிடும் உலக நாடுகளின் வர்த்தக தர வரிசையில் இந்திய 20 வது இடத்தில உள்ளது ஆனால் சீன வோ 1 வது இடத்தில உள்ளது. 1980 இல் நமக்கு பின் இருந்த சீன இன்று முதல் இடத்தில் உள்ளது என்பது நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். 1980 களில் உலக நாடுகள இந்திய உம சீனாவும் மக்கள் தொகை மிகுந்தவை ஆகையால் இவை வளர வைப்பு இல்ல என்று கருதியபோது அந்த மக்கள் தொகையே எங்கள் செல்வம் என்று உலகை திரும்பி பார்க்க செய்தது சீனா.

2009
இல் இருந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது சீனா. தன்னிடம் இருந்த பொருட்கள் உற்பத்தி திறனை சில வியுகங்கள் அமைத்து பெரிதும் பெருக்கியது சீனா. குறிப்பாக cluster approach என்று சொல்லகூடிய mile long என்ற வியுகத்தை கையாண்டது. இதன் படி ஒரு குறிப்பிட்ட மைல் நீளம் உள்ள ஒரு பகுதியில் ஒரே மாதிரியான தொழில் சாலைகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு தேவையான ஊக்கம் கொடுக்கப்பட்டது. விளைவு இன்று உலக சந்தை சீனா பொருட்களால் நிரம்பி வழிகிறது.
பயிற்சி பற்றி...
ஏற்றுமதி செய்யும் பொருளை கண்டறிவது அதற்குண்டான marketai கண்டறிவது, order எடுப்பது அதை நடைமுறை படுத்துவது, documentation , பண பரிவர்த்தனைகள் பற்றி, post export procedures , இது போன்றவற்றில் பயிற்சி அளித்து வந்தோம். இந்நிலையில் இந்தியாவில் ஏற்றுமதியாளர்கள் பெருகிவந்த நிலையில் இவர்குளடன் பணியாற்ற professionals தேவை என்பதை உணர்ந்தோம். இதற்காக தமிழகத்தில் முதல் முறையாக அயல்நாட்டு வர்தகதிற்கென ஒரு business school ஒன்றை மதுரையில்நிறுவி உள்ளோம். இதில் MBA in export /import managemant , MBA in logistics management , MBA in shipping and port management ...
logistics என்பது எல்லா நிருவனகளிலும் பொருட்கள் inbound and outbound movement இருக்கும் raw material procure செய்வது முதல் இறுதி பொருளை சந்தையில் சேர்ப்பது வரை இதில் அடங்கும். supply chain என்பது இதன் அடுத்த பரிமாணம் இதில் சந்தைகள் இணைப்பு பற்றியது.
ஏற்றுமதி இறக்குமதி பெருகி வரும் இக்காலத்தில் இத்துறையில் வல்லுனர்களுக்கு அதிகம் தேவை உள்ளது.
இதே போல் இன்னொரு அத்தியாவசிய துறை shipping and port management . நாம் பெரும்பாலும் இந்திய துறைமுகங்கள் என்றால் சென்னை, மும்பை போன்ற பெரி துறைமுகங்களை எண்ணுகிறோம். ஆனால் இந்திய வில் பல சிறு துறைமுகங்கள் வளர்ந்து வருகின்றன. இவை பெரும்பாலும் தனியார் உதவியுடன் மேம்படுதபடுகின்றன.
எடுத்துகாட்டாக காரைக்கால் துறைமுகத்தை maarg எனும் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இம்மதிர்யான project இல் BOT எனப்படும் build operate transfer எனும் முறையில் செயல்படுகின்றன. இவை non major ports எனபடுகின்றன. இது நெடுஞ்சாலைகளில் toll way அமைப்பது போன்றது. இவ்வாறாக 250 non major ports development காக கண்டறியப்பட்டுள்ளன. எனவே இதுவும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு துறை.

இந்த துறைகளில் தேவை படும் வல்லுனர்களை தயார் செய்யவே நாங்கள் foreign trade இர்ககவே ஒரு business school ஐ தொடங்கி உள்ளோம். இது போன்ற மற்றும் ஏற்றுமதி இறக்குமதி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள எங்க global foundation என்ற எங்கள் நிறுவனம் மூலம் தொலைநோக்குடன் செயல் பட்டு வருகிறோம்.

புதிய தலைமுறைகள் தாங்கள் பாப்ரம்பரியமாக் செய்து வந்த தொழில் தங்கள் படிப்பு மட்டும் exposure முலம் தங்களுக்கு கிடைத்த அறிவை பாரம்பரிய தொழில் செலுத்தி அதன் மேன்பாடிற்கு வழி செய்து வளர்ச்சி காண்கின்றன. உதாரணமாக் நண்பர்கள பலர் பரமபரியமாக தங்க நகை சிஐம் தொழில் கொண்டவர்கள் தங்கள் புது அனுபவங்களை செளுதஈ பல புதுமைகளை செய்துள்ளனர்.

இது போன்ற புதிய தொழில் முனைவர்களை ஊக்கிவிக்க வேண்டியது நம் கடமை.

இணையத்தின் பங்கு
முன்பு ஒரு order காக quotation அனுப்பிவிட்டு பின் பதிலுக்காக காத்திருந்து பின் செயல்பட வேண்டிய நிர்பந்தம் இருந்தது ஆனால் இன்றோ தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் நிமிடங்களில் நடந்து முடிகிறது. ஆனால் இதில் நாம் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகளும் உள்ளன. உதரனத்திற்க்கு நமக்கு வரும் ஒரு order இன் நம்பகத்தன்மையை அறிய நாம் export credit guarantee corporation எனும் ECGC அலுவலகத்தை அணுகலாம். இவர்கள் அந்த ஆர்டர் கொடுத்த நபர் நிறுவனம் பற்றிய செய்திகளை நமக்கு தருவார்கள்.

இலட்சியம்

மாதம் தோறும் மாவட்டம் தோறும் இரு நகரங்கள் வீதம் கருத்தரங்குகள் நடத்தி ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான விழிப்புணர்வை பெருக்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு செயல் பட்டு வருகிறார்.2015 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் ஏற்றுமதி ஆளர்களை உருவாக வேண்டும் என்ற லட்சயிதுடன் செயல் பட்டு வருகிறார்



திங்கள், 12 செப்டம்பர், 2011

ஆசிரியர் நா.சு. சிதம்பரம் 13.09.2011

ஆசிரியர் நா.சு. சிதம்பரம்
அறிவியல் ஆசிரியர் , ஓய்வு.
சிறப்பு: அறிவியல் அறிவை பரப்புவதையே தன் கொள்கையாக கொண்டு வாழ்பவர்
அறிவுச்சுடர், அறிவியல் ஒளி என்ற இதழ்களை நிறுவி இந்த சேவையை செய்து வருகிறார்.

இவர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆரம்ப காலத்தில் நம் நாட்டு கல்வி முறையில் மாற்றம் வேண்டி, மாணவர்களின் சிந்தனையை தூண்டும் விதத்தில் பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்க எண்ணினார். அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அப்போதைய நிர்வாக குழு தலைவர் டாக்டர் சுந்தரவதணன் அவர்களும், அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மணவாள ராமானுஜம் அவர்களும் பெரிதும் உதவிய பெயரில், அறிவுச்சுடர் எனும் மாதம் இருமுறை வெளிவந்த ஒரு பத்திரிக்கையை நிறுவினார்.

மாணவர்களை எழுத தூண்டினார், நிறைய அறிவியல் செய்திகளை வெளியிட்டார். இப்பத்திரிக்கையில், பாடத்திட்டத்தில் இல்லாத பொதுஆன செய்திகளை வெளியிட்டார். மாணவர்கள் எழுதியதில் பிழை இருந்தால் கூட அதை அப்படியே வெளியிட்டார்...இது மா.போ.சி அவர்களின் ஆலோசனையின் பெயரில், பிற்க்காலத்தில் அவர்கள் தங்கள் கட்டுரைகளை படித்து பார்க்கும் போது அவர்களது பிழைகளை அவர்களே உணர வேண்டும் என்பதற்காக என்று சொன்னார்.

ஆசிரியர் பணியில் நின்று ஓய்வு பெற்றப்பிறகும் அறிவியல் சிந்தனையை தொடர்ந்து பரப்பவேண்டும் என்ற ஆர்வம் தூண்டினாலும் பொருளாதார சிக்கல்கள் இடையஊராக இருக்க, தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் தலைவராக இருந்த திரு அய்யம்பெருமாள் அவர்களின் தூண்டுதலின் பெயரில் அறிவியல் ஒளி எனும் இதழை சிறய அளவில் முப்பது ரூபாய் சந்தாவிலே தொடங்கினார்.

அது இன்று நன்கு வளர்ந்து ஐந்தாவது ஆண்டை எட்டிவிட்டது. டாக்டர் வா.சே.குழைந்தைசாமி, திரு சிட்டிபாபு ஆகியோரின் ஆலோசனை மற்றும் ஆதரவு இதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

இந்த இதழில் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தமிழில் அறிவியல் செய்திகளை எழுதவும் அறிவியல் சிந்தனையை பரப்ப வேண்டி அறிவியல் வினா விடைகள், வானவியல் மற்றும் பிற அறிவியல் தகவல்கள் வெளியிடபடுகின்றன. இந்த இதழில் வெளிவந்த வானவியல் அறிஞர்கள் குறித்த முனைவர் அய்யம்பெருமாள் எழுதிய தகவல்கள் தொகுக்கப்பட்டு தமிழ் மணி பதிப்பகத்தால் வானவியல் முன்னோடிகள் என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

பெங்களுருவை சேர்ந்த திரு மோகன சுந்தர ராஜன் அவர்கள் இந்திய விண்வெளி சாதனை என்று எழுதிய தொடரும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

நோபெல் பரிசு பெற்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதிவரும் இவரது வெளியீடுகளும் தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ளன. இவை இது வரை பன்னிரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.

இந்த இதழ்களின் வாசகர் வட்டம் மிக சிறியதாக உள்ளதை சுட்டி காட்டினார். எனினும் தளராது பல பள்ளிகளுக்கும் இலவசமாக இந்த இதழ்களை அனுப்புகிறார்.

பள்ளிகளுக்கு நூற்கள் வாங்க நல்ல நிதி (மத்திய அரசாங்கம் ரூபாய் பத்தாயிரம் அளவில்) ஒதுக்கப்பட்டாலும் அவற்றை இன்னதான் செய்கிறார்களோ என்று ஆதங்கப்பட்டார். நூலகங்களும் இந்த இதழில் ஆர்வம் காட்டினாள் இதன் வாசகர் வட்டம் பெருக பெரிதும் உதவும் என்றார்.

அறிவியல் மனப்பான்மை
அறிவியல் மனப்பான்மை வளர்க்கவேண்டும் என்ற ஒரே இலட்சியத்தோடு இந்த இதழை நடத்துகிறார். கடவுளுக்கும், தலைவர்களுக்கும்,நடிகர் நடிகைகளுக்கும் விழா எடுக்கும் நாம் நமக்கு அன்றாடும் பயன்படும் மற்றும் இன்றியமையாததுமான அறிவியலை பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.அறவியலின் பயன்களை முழுமையாக அனுபவிக்கும் நாம் அவற்றை நமக்கு வழங்கிய அறிவியல் அறிஞர்களை பற்றி சிந்திப்பதேயில்லை.

எடுத்துக்காட்டாக இந்தியாவிலேயே அறிவியலுக்காக மூவர் நோபெல் பரிசு பெற்று உள்ளனர் அந்த மூவருமே தமிழர்கள். இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்? தேசிய அறிவியல் நாள் என்று கொண்டடபடுகிறது என்ற எத்தனை பேர் அறிவோம்?

சர் சி வி ராமன் அவர்கள் ராமன் விளைவு என்ற
தன் கண்டுபிடிப்பை வெளியிட்டது பிப் 29 அன்று. அதை கொண்டாடும் வகையிலேயே பிப் 28 அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை நாம் இல்லாரும் அறிந்திருக்க வேண்டாமா.

இதை பரப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே இது வரை ௫௭ அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுள்ளார் . இது அனைவரை சேர வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தகக்கண்காட்சியில் கூட கூவி கூவி விற்காத குறையாக இதை மக்களிடம் சேர்க்க முயல்கிறார்.

இயற்பியலில் ஆர்வம்:
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் அடிப்படை தன்மைகளை பற்றி கூறும் இயற்பியளிலேயே இவர் அதிக ஆர்வம் உள்ளவர். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் காலத்திலும் இயற்பியல் செய்முறை விளக்கங்களில் அதிகம் அவர்களை ஈடுபடுத்தயுள்ளார். அறிவியல் கல்வி ஒருவனை மூடனம்பிகையில் இருந்து விளக்கும்.

நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ள இவருக்கு இணையதளம் பெரிதும் உதவி உள்ளதை நன்றியோடு நினைவுகூர்ந்தார். இணையதளம் ஊர் இணை அற்ற நூலகம் அதை மாணவர்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் என்று வேண்டினார்.

நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்களுள் இவரை பெரிதும் கவர்ந்தவர் மேடம் குறி அவர்கள். அவர் தன் கண்டுபிடுபுகளுக்கு காப்புரிமையை நிராகரித்தால் தான் நாம் பெரிதும் பயன் அடைய முடிந்தது. இவர் வேதியளிலும் நோபெல் பரிசு பெற்றுள்ளது மேலும் சிறப்பு.

கலங்கரை விளக்கத்திற்காக உழைத்த ஓர் அறிஞர் தன் கண்பார்வையே இழக்க நேரிட்டுள்ளடு. இவர்களின் தியாகங்களை நாம் போற்றவேண்டும்.

அறிஞர்களை போற்றவேண்டும்
அறிஞர்களை நாம் போற்றவேண்டும். நாமோ அவர்கள் புகழ் பெற்றபின்பு தான் அவர்களை போற்றுகிறோம். வேங்கட ராமகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோரை நாம் அவர்கள் புகழ் பெற்ற பின்னே போற்றுகிறோம்...

ஆன்மிகம் அற்ற அறிவயல் குருடானது அறிவியல் அற்ற ஆன்மிகம் நொண்டி என்று ஐன்ஸ்டீன் ஒரு தத்துவ மேதையும் கூட என்று எடுத்து காட்டினார்.

நம்பகத்தன்மை வேண்டி நோபெல் கமிட்டியின் தளத்தில் இருந்தே தகவல்களை பெரிதும் சேகரிக்கிறார். இவ்வாறான அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அவர்களுடைய சமுதாய உணர்வு, ஆற்றல், உழைப்பு ஆகியவை நமக்கு தெரிகிறது.

சில அறிஞர்கள் எமாற்றபடுவதும் உண்டு. உதாரணமாக ஜகதீஷ் சந்திர போஸே அவர்கள் மார்கோனிக்கு முன்பே ரேடியோவை கண்டுபிட்துவிட்டார் என்பதும் தொலைபேசியை தான் கண்டிபிடிததாக சிலர் வழக்கு தொடர்ந்டிருபதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதங்கம்
இன்றைய மாணவர்கள் பொழுதுபோக்கிலும் அதிகம் பணம் சம்பாதிபதிலுமே நோக்கம் உள்ளவர்களாக உள்ளார்கள். இனரிங்கர்களின் வரலாறுகளை படிக்கும் பொது தியாக மனப்பான்மை, உழைக்கும் திறன், சமுதாய உணர்வு ஆகியவை வளரும் என்பது இவரது நம்பிக்கை.

மைகேல் பாரடி இன் தி கெமிகல் ஹிச்டோரி ஒப் எ கண்டலே என்ற நூலை உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்காக இவர் மொழி பெயர்த்து உள்ளார் . தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் வகுப்புகள் எடுக்கிறார் ௬,௭. ௮ வகுப்பு மாணவர்களுக்கு. நகராட்சி பள்ளிகள் இது போன்ற வகுப்புகளால் பயனடைவதில்லை என்பது இவரது ஆதங்கம்.

மேற்றிகுலஷியன் பள்ளிகளும் சி பே எஸ் சி பள்ளிகுலுமே பெரிதும் பயன் அடைகின்றன. இதற்கு அரசின் நடவடிக்கை தேவைபடுகிறது.

உதரணமாக மத்திய அரசு ஒவ்வொரு பள்ளியுளும் இரு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் கொடுத்து அவர்களை சில ப்ரோஜெக்ட்ஸ் செய்ய ஊக்குவித்து அவற்றை மாவட்ட அளவில் போட்டியிட செய்து தேர்வு செய்து பிறகு மாநில மற்றும் தேசிய அளவில் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறாக தேர்வாகும் மாணவர்கள் படிப்பின் முழு செலவையும் அரசாங்கமே ஏற்கிறது.

இளமை
இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதையும் சக மாணவர் ராஜேந்திரன் குண்டடி பட்டு இறந்ததையும், அந்த போராட்டமும் மாணவர்களின் எழுச்சியும் தான் திராவிட கட்சிகள் வளர்ச்சி பெற உதவியதையும், தான் மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்ததையும், ராஜென்டிரனின் உருவ சிலையை கலைஞர் திறந்து வைக்க வந்தபோது அவருக்கு கருப்பு கொடி காட்டியதையும் , காமராஜற்காக நாகர்கோவிலில் இடைதேர்தளுக்காக அரசியல் பிரச்சாரம் செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தது சுவையாக இருந்தது.

ஆரம்பக்காலம்
ரங்கா சாய் பகுதியில் உள்ள குருசாமி பள்ளியில் இவர் ஆசிரியராக சேர்ந்த பொழுது இவரது சிறிய உருவமும் அங்கிருந்த ஒழுங்கீனத்தைக்கண்டு சற்றே அஞ்சியதும் பின் துணிச்சலுடன் செயல் பட்டு மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்ததும் அறிவியல் கழகம் நிறுவியதும் அறிவுச்சுடர் பத்திரிகை ஆரம்பித்ததும் மாணவர்களை கல்வி துணை செயல்களில் ஈடுபடுத்தி அவர்களை நல்வழி படுத்தியதும், தன் மகள் தன்னை 'அறிவுச்சுடரை கட்டி அழும் அப்பா'என்றழைத்ததும்,சுவையான நிகழ்ச்சிகள்.

வயதும் பணியும்
இவருக்கு இப்போது அறுபத்தியாறு வயது ஆகிபோனாலும் தான் ஒரு இளைஞனின் ஆர்வத்துடனும் ஷக்தயுடனும் செயல் படுவதை பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். இந்த அறிவியல் ஒளியை தமிழ்நாடு முழுவதும் பரவ செய்ய வேண்டும், தலைவர்களையும் நடிகர்களையும் போற்றுவது போலே அறிஞர்களையும் போற்ற வேண்டும் என்பதே தன் லட்சியம் எனவும் அதனை நோக்கியே தான் பயணிப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

தனது ஆசிரயர் ஒருவர் தான் படிக்கும் நூற்களின் குறிப்புகளை சேகரிக்கும் பழக்கத்தை கண்டு தானும் அது போல் சேகரிக்க தொடங்கியதும் அது தனக்கு பத்திரிகைகள் நடத்தும் போது உதவியதையும் நினைவுகூர்ந்தார்.

உலக அறிஞர்கள் பற்றி பல எழுதியிருந்தாலும் இந்திய அறிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல இதழ்களில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சர் சி வி ராமனுக்கு உதவியாளராக இருந்த திரு கே எஸ் கிரிஷ்ணன் என்பவர் மின் அணு துறையில் முன்னோடியாக விளங்கியதையும் ஹோமி பாபா அவர்களை பற்றியும் விக்ரம் சாராபாய் , பிரபுல சந்திர என்ற மருந்தியல் துறை நிபுணர், சாஹா ஆகியோரை பற்றியும் எழுதி உள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் , பிரம்மோஸ் சிவதானுப்பில்லை அவர்களும் தனது பத்திரிகையில் பங்காற்றியுள்ளதையும் பல அறிஞர்கள் தனுக்கு உதவி வருவதையும் சுட்டி காட்டினார்.

கல்வித்திட்டத்தில் ஆலோசனைகள்
ஆசிரியர் பனி அறப்பணி அதற்க்கு உன்னை அர்ப்பணி. ஆசிரியர்கள் விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். பாடத்திட்டதுடம் கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்துச்சொல்ல வேண்டும். இதற்க்கு அவர்கள் நூலகங்களை நாட வேண்டும். நூலகங்களை செயல் படுத்த வேண்டும். நூலகத்திற்கு ஒரு வகுப்பு ஒதுக்க வேண்டும்.

பாடத்திட்டத்தை தாண்டி படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்; இதழ்கள் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும், செய்முறை பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 3 டி போன்ற படத்தை எளிமையை புரியச்செய்யும் அனிமேஷன் ஆகியவற்றின் மூலம் பாடம் கற்ப்பிக்க அரசு வகைசெய்ய வேண்டும்.

பத்திர்க்கைகள் படிப்பதை பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கும் மதிப்பெண் வழங்கினால் தான் மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி ஆர்வம் காட்டுவார்கள் என்பது இவரது கருத்து.

முன்பு நீதி போதனை என்று ஒரு வகுப்பு இருந்தது போல் மாணவர்களிடம் ஒழுக்கத்தை கற்பிக்கும் முறை வரவேண்டும். அறிவியல் மட்டும் அல்லாது பிற சமூகரிவியல் படங்களிலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் கருத்துக்களை பதிவிசெய்ய சொல்வது, அவர்களை சிந்திக்கத்தூண்டுவது. மாணவர்களின் கருத்துக்களை பற்றி ஆராய ஆசிரியர்கள் நன்கு படிதவர்களாய் இருத்தல் வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு பெரிய மாற்றம் ஏற்பாடு வாய்ப்பு உண்டு. நாம் காலம் காலமாக கட்டி அழும் பாடத்திட்ட முறையை விட்டொழித்து காலத்திற்கேற்றவாறு நம் பாட முறையை சுய சிந்தனையை தூண்டும் விதத்தில் புதியதாக கண்டுபிடிக்கும் விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

இறுதியாக ஒரு மாணவன் lpg சிலிண்டரின் எடையை அளப்பதற்கு காற்று நிறைந்த ஒரு டயர் டுபஐம் அதனுடன் ஒரு தண்ணீர் நிரம்பிய மெல்லிய டுபீயும் பொருத்தி அந்த தண்ணீர் அளவின் ஏற்ற இரக்கத்தை கொண்டு சிலிண்டரின் எடையை கூறும் எளிய முறைக்கு மத்திய அரசு பரிசு அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

முனைவர் சந்திரா- 12.09.2011

இன்றைய விருந்தினர் முனைவர் சந்திரா அவர்கள்..
தமிழ் ஆசிரியர் மதுரை காமராஜர் பல்கலைகழகம்
சிறப்பு: தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள்
நூல் திறனாய்வு
கவிதைகள் எழுதுவது , கவி அரங்கங்களில் பங்கு
சிறந்த ஆசிரியர்

1. சங்க இலக்கியங்களில் தன் முனைப்பு தேவை .
ஐந்து வகையான தேவைகள் பற்றி கூறினார், அவை: உடல் சார்ந்த, பாதுகாப்பு சார்ந்த, ... தன்முனைப்பு சார்ந்த
தன்முனைப்பு தேவைகள் மிக முதிர்ந்த நிலையை அடைபவர்களுக்கே தோன்றுகிறது.
ஐந்தினைகளுள் (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை) பாலை தினையலேயே தன்முனைப்பு தேவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதியமான் அவ்வைக்கு நெல்லி கனி கொடுத்தது,
' வாகை தானே பாலை அதன் புறனே' என்ற தொல்காப்பிய பாடலில் அகமும் புறமும் ஒன்று தான் என்ற கருத்து

2. எழுத்தில் ஆர்வம் விரிவுரைஆளர் ஆன பிறகே

3. பாரதிதாசன் கவியரங்கம் :
காலை பரிதியும் மாலை மதியத்தையும் வருணித்த கவிஞன்
பாட்டாளியை கதாநயகனாக பாடிய கவிபெரும் கூட்டாளி அவன் ..
சமத்துவ சமுதாயத்துக்கு சாமரம் வீசியவன்
சுயமரியாதை கொள்கைக்கு சுடர் விளக்கேற்றியவன்...
அடிமைத்தனத்தை கவிதை ஆயுதத்தால் சாடியவன் ..
முதுமையின் அன்பு பற்றி பாடிய முத்தான கவிஞன் ..
மனிதருள் நீயும் ஓர் மனிதன் மண்ணன்று ..விழித்திடு என்று கட்டளை கவிதை பாடியவன்

4. கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் உரை எழுதி உள்ளார். பாடல்களின் எளிய விளக்கம் ...

5. ஆய்வுகள்:
1.ஐம்பெரும் காப்பியங்களில் தர்மம் :
சிலப்பதிகாரத்தில் கோவலனின் தர்மம்: கீரிப்பிள்ளை கதை ..;
மணிமேகலையில் சிறைச்சாலை அரசாலையாக மாறியது; சீவக சிந்தாமணியில் எட்டு அறிவுரைகள்; ...

2. பெரிய புராணத்தில் வாழ்க்கை நெறி:
கொள்கையில் பிடிப்பு-தில்லை நந்தனார் கதை ...

3. இயற்கையை ஆசிரியராக பாவித்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:
மீனிடம் வலிவு சுளிவு , சிறுகொடியில் பெரிய பூசணி- பிரச்சனைகளை சமாளிப்பது ...

4. குடும்ப கட்டமைப்பில் நெறிமுறைகள்; கூட்டாக வாழ்வது பற்றி

5. தாயுமானவர் பற்றி:
பரிபூரனட்ந்தம் எனும் நூலில் பிரபஞ்சக்கோட்பாடு பற்றி- ஐம்பூதங்களும் மனிதனும் இணைந்து செயல் படுவது குறித்து - வெப்பமும் மனித வாழ்வும், கடல் அலை போல இறைவன் சிறு விளையடுகளால் சோதிப்பான் ....

6. திருமுலர் இன் திருமந்திரம் பற்றி :
பத்தாவது திருமுறை, ௨௨௫௬ வது பாடல்- மரத்தை மறைத்தது மாமத யானை/ மரத்தில் மறைந்தது மாமத யானை
ஐம்பூதகளில் இறைவனை காண்பதும் மறைவதையும் பாடிஉள்ளார்... காரிய காரண மயக்கம்.. இலக்கிய இலக்கண மயக்கம்... செயல் சிந்தனை மயக்கம் .... சமயங்கள் கோட்பாடுகள் மயக்கம் குறித்து

6.கருதருங்குகளின் பங்கு/ முக்கியத்த்உஅம் குறித்து

7. கவிதைகள்:
விளைநிலங்கள் வீடாக மாறுவது பற்றி-

சட்டத்தில் இடம் உண்டோ;
நிலங்கள் பச்சை பட்டாடை கலையப்பட்டு கந்தல்கோளத்தில் காட்சி
நாற்றுநட்ட பெண்களெலாம் தீப்பெட்டி தொழில்சாலை பேருந்தில் பயணம்
...
பூமகள் மேனி அளக்கப்பட சிலுவைகளாய் அறயப்பட்ட கல்லாணிகள்
புல்பூண்டுகள் இருந்த இடத்தில் இன்று கற்குவியல்கள்..
பசுந்தளிர்கள் வாழ்ந்த இடத்தில் பலமாடி கட்டிடங்கள்...
ஐந்தறிவு ஜீவன்களின் சொத்துக்களை அபகரிக்கும் ஆறறிவு மனிதன் மீது
வழக்கு தொடர .... எச்சடத்தில் இடமும்ண்டு எவரேனும் சொல்வீரோ ..

மண்
பாரத யுத்தமும் உண்ணால் தான்
பாரத் பெற்றோலஐமும் உண்ணால் தான்
கறுப்புத் தங்கம் முதல் சொக்கத் தங்கம் வரை
அனைத்தும் மண்ணே உண்னுள் தான் அடக்கம்
குடிசை முதல் கோபுரம் வரை நீ இல்லை என்றால் கட்டிடங்கள் ஏது
....
கரையில் நின்று நதி பெண்ணை காவல் காத்தாய்...
இன்றோ கொள்ளைர்களிடம் களவு போனாய்...

அக்க்ரினைகளை கருவாக வைத்து பல பாடல்கள் எழுதி உள்ளார். 'அக்க்ரினை ஆயுதம்' என்ற தலைப்பில் அவற்றை வெளியிட உள்ளார்.

மிதிவண்டி
ஏழைகளின் துக்க வாகணம்
சிறார்களின் சொர்க்க வாகணம்
எத்தனை முறை மித்தாலும் எதிர்த்து பேசாத மௌன வாகணம்
உண்ணாமலையே உழைக்கும் உண்ணத வாகனமும் நீ தான்
...
அன்றும் இன்றும்
.....மூலையை அடகு வைத்து முதுகுக்கு பின்னால் பேரம் பேசும் கல்வி இன்று ...

பாரதியார் கவியரங்கத்தில் :
பாரதியின் ஆதிச்சுடியின் நேற்றிச்சுடியாக அமைந்ததே
அச்சம் தவிர் என்பது தான்
சிறார் முதல் சீராளன் வரை அனைவரும் அறிந்த அருமை தொடர்-
அச்சம் இல்லை அச்சம்மில்லை
...
தனி ஒருவனாய் நின்று இலக்கிய பயணம் செய்தவன் ..
பயம் இல்லை எனில் ஜெயம் உண்டு என்று முழங்கியவர் இவர் ..
அஞ்சாமையே அவரது தாரக மந்திரம் ..
கை கட்டை நிற்பவரை கண்டால் கடுஞ்சினம் கொண்டு சீறியவர் இவரே
அஞ்சாமையை அஸ்திவாரமாக கொண்டு கவி மாளிகை கட்டியவர் இவர்
பேசா பொருளை பேச துணிந்தவர் கேட்கா வரத்தை கேட்க துணிந்தவர்
..கணபதி பாடலில் அச்சம் நீக்கு என்றார்
அசையஆ நெஞ்சம் வேண்டும் என்றார் அகவருட்பவில்
அஞ்சேன் என்றார் விருத்தப்பாவில்
அருள் உண்டு அச்சம் இல்லை என்று அடித்து கூறினார்
போருக்கு அஞ்சுவேனோ உன்னை போடி ஆகுவேன் என்று
மாயையிடம் சூளுரைத்தவர்
அச்சம் உள்ளவன் அரைமனிதன் என்றார் ...
அச்சமும் வேட்கையும் வென்றுவிட்டால் அங்கே மரணமும் வெல்லப்படும் என்றார்..
காற்று தேவனை கண்டு அஞ்சாதீர் அதுதான் பிராணன் என்றார்
காலனே உன்னை நான் சிறு புலேனே மதிக்கேறேன்
என் காலருகே வாட சற்றே உன்னை மிதிக்கேரேஎன் என்று
எமதர்மனையே எதிர்த்து பேசிய
கத்தாலன் இவர் .....

வளர்ந்து வரும் எழுத்தாளர்களை அவர் நூற்களை திறனாய்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்துகிறார்

தமிழியல் உணர்ச்சி குறித்து:
கரிகாலன் அவையில் கன்னித்தமிழாய்
பாண்டியன் அவை தனில் பைந்தமிழாய்
சேரன் செங்குட்டுஅன் அவையில் செந்தமிழாய்
மூவேந்தர் அவையில் முத்தமிழாய் ஆனாய்
ஆதிமந்தியாரின் அரசவையில் அழகு தமிழ்
ஔவையாரின் அருகில் அமிழ்த தமிழ்
வெள்ளிவீதியாரிடம் விளையாடிய வெந்தமிழ்
பாரி மகளிர் பாவிலோ பசுந்தமிழ்
ஆண்டாளின் அருளில் அற்புத தமிழ்
மூவா தமிழே நீ தானே அன்று மோசி கீரருக்கு முரசு கட்டிலை அளித்தாய்
பாரிக்கும் கபிலனுக்கும் பாலம் அமைத்தாய்
திருவள்ளுவரிடம் திளைத்தாய் திதித்தாய்
கம்பனின் கரங்களில் கற்பூர தமிழாய்
இளங்கோவடிகளின் இதழில் இன்ப தமிழாய்
நாயன்மார்களின் நாவில் நறுந்தமிழாய்
...
உ வே சா வின் உயிரில் உவர்ப்பு தமிழாய்
சித்தர்களின் சிந்தனையில் சித்திர தமிழாய்
வீரமா முனிவரின் வீர தமிழாய்
மஹா கவியின் மதுர தமிழாய் ...
பாரதிதாசனிடம் பண்பாடினாய் பாமர தமிழாய்
கண்ணதாசனிடம் கனிந்தாய் காவியத்தமிழாய்
இலக்கணமாய், இலக்கியம்மாய் , உரைநடையாய் உலா வந்த நீ
இன்று புதுக்கவிதையாய் புத்தாடை அணியும் நாள்
....
தமிழா!!! தமிழ் உன் முரசு ஆகட்டும்
தமிழ் பண்பாடு உன் கலசம் ஆகட்டும்

தற்போது நூல்களுக்கு அணிந்துரை எழுதுகிறார்
நூற்றுக்கும் மேலான திறனாய்வுகளை புத்தகமாக வெளியிட உள்ளார்

ஹைகூ :

அக்க்ரினை சார்ந்த ஹைக்கூகள் எழுதுகிறார்

பிறந்த அன்றே மரணத்தை சந்திக்கும் மாயப்பிறவி- செய்தித்தாள்

கண்ணாடி சட்டத்தில் இருந்து கொண்டு கடமையை உணர்த்தும் கண்ணியவாதி- கடிகாரம்

அருகருகே இருந்தாலும் முட்டி மோதாது..... சுழலும் சமாதன பிறவி - மின்விசிறி

உழவு மாடுகள் உல்லாசமாய் பயணம் போகின்றன
உயிர் இழக்கப்போவது தெரியாமல்
பயிர்களோடு மனிதப்பினிகளை சேர்த்தே வளர்க்கின்றன செயற்கை உரங்கள்
நிலமகளின் துகில் உரிக்க துர்ச்சாதனனாய் அறுவடை இயந்திரங்கள்

நதியே!
...
நன்செயும் புன்செய்யும் உன் இளைப்பாறும் இடங்களாய் இருக்க
நீயோ காற்றோடும் முகிலோடும் உறவாடி ஊருக்குள் வருகிறாய்
அழையா விருந்தாளியாக ...

காலணி
குடியானவர் முதல் கோடீஸ்வரர் வரை நீங்களே துணை
...
பொன் அணி இல்லையேல் மாற்றுக்கு புன்னகை உண்டு
நீங்கள் இல்லையேல் பயணம் வெறுமையே ....

இவர் மாணவர்களையும் கவிதை , திறனாய்வு எழுத ஊக்குவிக்கிறார் ... மாணவர்களின் தொகுப்பும் வெளிவந்துள்ளது



வியாழன், 8 செப்டம்பர், 2011

மீண்டும் எழுதுகிறேன்

நான்கு வருடங்களுக்குப பிறகு மீண்டும் வலை பதிவு செய்கிறேன் ... இம் முறை என் இனிய தமிழில். கூகுளே ற்றன்ச்ளிடேரடின் தலத்தில் உள்ள பக்கத்தில் தட்டச்சு செய்து அதை வெட்டி என் பதிவு தலத்தில் ஒட்டுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரமேஷ் பிரபாவின் சந்தித்தவேளையில் நிகழ்ச்சியால் உந்தப்பட்டு அவரது பரிமாற்றங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை எழுத தொடங்குகிறேன். அவரது நிகழ்சியை காண முடியாதவர்களுக்காகவும் அவரது பரிமாற்றங்களை மீண்டும் refer செய்ய விரும்புபவர்களுக்காகவும் இந்த பதிவை செய்ய விழைகிறேன்.

இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது என்னுள்ளும் ஒரு பெரிய கேள்வியாக இருந்தாலும் ஒரு சிறு தொடக்கமாக இது இருக்கட்டுமே என்றெண்ணி தொடங்கிகிறேன். நன்றி